எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டிலுள்ள அரச மற்றும் அரச சார்புடைய அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (04 .04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 2023ம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், எதிர்வரும் ஏப்ரல் மதம் 17ம் திகதி முதல் மே மாதம் 12ம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளதோடு, மே மாதம் 13ம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.