இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டு முட்டைகளுடன் ஒப்பிடும் போது, இந்திய முட்டைகள் அதிக தூய்மை மற்றும் தரம் வாய்ந்தவையாக இருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை இந்த நேரத்தில் குறைக்க முடியுமா என்பது குறித்து மேலும் ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை குறைக்கப்பட்ட போதிலும் அவை குறைக்கப்படவில்லை என மக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.