இன்றும் பல இடங்களில் மழை!

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று (08.04) மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் சில இடங்களில் 50 மி.மீ. இருக்கும் அதிகமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply