மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று (08.04) இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் நாளை (09.04) மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.