கல்வியமைச்சின் புதிய சுற்றறிக்கை!

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று (20.04) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதம் வழங்குவதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கையின்படி இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் அதிகாரத்தை பாடசாலை அதிபருக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version