கண்டியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு!

கண்டி அக்குரண பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக நேற்று (19.04) கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டி பிரதேசத்திலுள்ள 203 பள்ளிவாசல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அனைத்து பள்ளிவாசல்களிலும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் கிரிஷாந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ரமழான் தினத்தில் வழிபாடுகளின்போது கண்டி, அக்குறணை பகுதியில் உள்ள பிரதான பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலை பாதுகாப்புப் பிரிவினருக்கு அனுப்பி வைத்த பொலிஸ் மா அதிபர், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அலவத்துகொட பொலிஸாருடன் அக்குரணை பிரதேசத்தில் உள்ள பிரதான பள்ளிவாசலுக்கு சென்று தேவாலய நிர்வாக குழுவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில், அனைத்து முஸ்லிம் தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலைமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதியில் விரிவான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply