இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்திற்கான அதிகூடிய வேலைவாய்ப்பு ஒதுக்கீடாக இது அமைந்துள்ளதுடன், 6500 பேருக்கு இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக வாராந்தம் 200 இலங்கையர்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் பணியாற்ற 109 இலங்கையர்கள் நேற்று புறப்பட்டுள்ளதுடன், மேலும் 65 இலங்கையர்கள் நாளையும், மேலும் 28 இலங்கையர்கள் நாளை மறுதினமும் பயணிக்க உள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.