இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கே 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (25.04) பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கம் 84 கி.மீ கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.