இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த முடியும் – மத்திய வங்கியின் ஆளுநர்!

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்தனைகளுக்கும் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதான உரையை ஆற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கையில் உணவுப் பணவீக்கம் 47.6% ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version