எதிர்வரும் சனிக்கிழமை 10 மணித்தியால நீர் விநியோக தடை!

கொலன்னாவ நகரசபை மற்றும் இராஜகிரிய நகரசபை உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29.04) காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

கொலன்னாவ மாநகரசபை மற்றும் மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை ஆகிய பகுதிகளுக்கும், கொஸ்வத்தை மற்றும் இராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதியில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ நீரேற்று நிலையத்தின் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version