இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இடம்பெற்ற இணையவழிப் பேச்சுவார்த்தைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (28.04) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், தளபாடங்கள் மற்றும் இலங்கையில் தங்கள் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் திகதி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தமது த்விட்டேர் தலத்தில் பதிவிட்டுள்ளார்.
யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் அடுத்த வாரத்தில் அறிவிப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி (CBSL), முதலீட்டுச் சபை (BOI), இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.