கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கஜுகம பகுதியில் நேருக்கு நேர் மோதி இன்று (05.05) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.