இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, வடமாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளிலும் மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version