பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி, விளையாட்டுத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களிற்கு வெற்றிக்கின்னங்களும், வெற்றிப்பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் அ. லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
