வவுனியாவில் ஆசிரியர் பெயரை எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவன்: பொலிசார் தீவிர விசாரணை!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் (11.05) தற்கொலை செய்துள்ளார்.

கோவிற்குளம் இந்து கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சிதம்பரபுரம் பொலிசார் கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தில் என் சாவிற்கு காரணம் வவுனியா இந்து கல்லூரி ஆசிரியர் ஒருவர் என ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனைக்காக மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version