தென் கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

தென் கொரியாவில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, தென் கொரிய நாட்டில் நேற்றைய (16.05) தினத்தில் மட்டும் 26,147 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதுள்ள கொவிட் சட்டங்கள் தளர்த்தப்பட்டமையே நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

தென் கொரியாவில் இதுவரையில் 31,465,107 கொவிட் – 19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version