கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடவத்த சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், காயமடைந்த நபரின் சகோதரர், சகோதரரின் மகன் மற்றும் மற்றுமொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 56, 20 மற்றும் 25 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் காணி தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றிரவு (18.05) காயமடைந்த நபர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் நின்று கொண்டிருந்தபோது சந்தேகநபர்கள் அந்த இடத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (19.05) மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.