நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

2023ம் ஆண்டு முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023ம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையில் இரண்டாம் கட்டப் கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் (26.05) நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டுக்கான க.போ.த சாதாரணதர பரீட்சைகள் எதிர்வரும் 29ம் திகதி முதல் அடுத்த மாதம் 08ம் திகதி வரை இடம்பெறவுள்ளதால், அடுத்த மாதம் 12ம் திகதி முதல் பாடசாலை தவணையில் மூன்றாம் கட்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version