பலபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் அம்பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பிரதி அதிபராக கடமையாற்றியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இன்று (26.05) காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.