ஜனாதிபதியின் விசேட உரை இன்று!

இன்று இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 9 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பொது மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்து நாட்டின் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டுப் பிரேரணையையும் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version