தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08.06) இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ள வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணி சிக்கல்கள் தொடர்பான விடயங்களையும், தொல்லியல் இடங்களின் பாதுகாப்பு மற்றும் மக்களுக்கான நன்மைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.