முல்லேரியா பகுதியில் ஐந்து வயது குழந்தையின் சடலம் மீட்பு!

முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் ஐந்து வயது குழந்தையின் சடலம் நேற்று (08.06) மாலை மீட்கப்பட்டுள்ளது.

உடைந்த போத்தலில் இருந்து கண்ணாடித் துண்டுகளால் காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கதிற்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லேரிய பொலிஸார், அப்பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து குறித்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹல்பராவ, மாலம்பே பகுதியைச் சேர்ந்த 05 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பிள்ளையின் தாய் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதால், குழந்தை தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) வைக்கப்பட்டுள்ளது.

முல்லேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version