மாத்தறை, திக்வெல்ல தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காலை 07.10 மணியளவில் மோட்டார் வாகனத்தில் வந்த குழுவொன்றினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.