மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இன்று (19.06) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடமத்திய மாகாணம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மாகாணம், புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கிறது.