நாட்டின் பல இடங்களில் நில அதிர்வு பதிவு!

இலங்கையின் பல பகுதிகளில் பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் பு சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையின் தென்கிழக்கு கடலோர பகுதியில், 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இது மிக ஆழமான பகுதியில் மையம் கொண்டிருந்தாலும், எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன்  கொழும்பு பத்தரமுல்ல அக்குரச காலி உட்பட பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply