புகையிரதம் தடம் புரள்வு – மலையக புகையிரத சேவை பாதிப்பு!

வடகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு அஞ்சல் புகையிரதத்தின் இயந்திரம் புகையிரத பாதையில் மரமொன்று வீழ்ந்ததன் காரணமாக தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மலையக பாதையின் ரயில் சேவை கொட்டகலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கும்புருகமுவ மற்றும் வெலிகமவிற்கு இடையில் புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கரையோரப் பாதையில் பயணிக்கும் பல ரயில்கள் தாமதமாகியுள்ளன.

Social Share

Leave a Reply