2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர மற்றும் சாதாரணத் தரப் பரீட்சை அட்டவணைகளை மாற்றுவதாக கல்வி அமைச்சு இன்று (07.07) அறிவித்துள்ளது.
இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் நடாத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரணதர பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.