மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுகூடம் இல்லாததால், தரம் குறைந்த மருந்துகள் சந்தையில் அதிகளவில் புலக்கத்தில் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தள்ளார். .
பெரும்பாலும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சரியான பொறிமுறை இலங்கையிடம் இல்லை என சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக்கு வரும் அனைத்து வகை மருந்துகளின் தரத்தையும் பரிசோதிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரத்துடன் கூடிய மேம்பட்ட ஆய்வுகூடத்தை நிறுவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அண்மைய நிகழ்வுகள் நோயாளிகள் ஊடாக மருந்துகளின் தரம் பரிசோதிக்கப்படுவதை தெளிவாக்குவதாகவும், பொருத்தமான வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து தர உறுதி ஆய்வகத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் அவசரகால கொள்வனவுகளின் கீழ் பதிவு செய்யப்படாத மருந்துப் பொருட்களின் கையிருப்பு நாட்டிற்குள் பிரவேசித்துள்ளமை மருத்துவ நிபுணர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.