இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,049 என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையில் 52 டெங்கு பரவல் அபாயப் பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் அதிகரித்துள்ளது.
மே மாதத்தில் 9,696 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த போதிலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அது படிப்படியாகக் குறைந்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜூன் மாதத்தில் 9,916 டெங்கு தொற்றாளர்களும், ஜூலை மாதத்தில் 5,729 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.