கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் சுமார் 10 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இன்று (26.07) காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் வெட்டு அமுற்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.  ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்படி பூகொட, கிரிந்திவல, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வத்துபிட்டிவல, மைம்புல, மடுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.  

Social Share

Leave a Reply