யாழ் பாடசாலை ஒன்றில் ஆர்ப்பாட்டம்!

யாழ்பாணம் வேலணை நடுநிலைப் பாடசாலை அதிபராக இந்து மதத்தவர் அல்லாத ஒருவரை நியமித்தமைக்கு எதிராக நேற்று (25.07) பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் சிலர் அதனை எதிர்க்க முற்பட்டபோது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபர் இந்துவாக இருக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலத்த கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பாடசாலையின் முதல்வர் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவரை அதிபராக நியமித்தமையினால் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் ஏற்பட்ட இந்த பதற்ற நிலை காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்ட போதே மாணவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் பாடசாலையில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply