நைஜர் ஜனாதிபதி ஆட்சியிலிருந்து வெளியேற்றம்!

மேற்கு ஆபிரிக்க நைஜரின் ஜனாதிபதியான மொஹமட் பாஸூம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நைஜரில் நடைபெற்ற தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் ராணுவத் தளபதியாக இருக்கும் கர்னல் அமடூ அப்த்ரமானே மற்றும் பல அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளமை அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புச் சூழல் சீர்குலைந்து வருவதாலும், மோசமான நிர்வாகத்தாலும், அவரது ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2020ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் நடக்கும் 7வது ராணுவ சதிப்புரட்சி இது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version