அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்களுக்கு பிணை!

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடைய 37 சந்தேக நபர்களும் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல 2022 மே மாதம் இலங்கையின் ஏற்பட்ட அமைதியின்மையின் போது படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply