விளையாட்டுதுறை அமைச்சரினால் விசேட வர்த்தமானி வெளியீடு!

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இப்பிரிவு 15.02.2023 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அமுலாகும் எனவும், இந்த புலனாய்வு பிரிவின் பிரதானியாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ. ஜெயநாத் வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version