இன்றைய வானிலை!

08 மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை வழமையை விட அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (24.08) பிற்பகல் 2.30 மணி வரை செல்லுபடியாகும் என சுட்டிக்காட்ட[பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (24.08) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை இல்லாத வானிலை நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply