வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவர் OLIVIER PRAZ தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்த அவர், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸைச் சந்தித்த போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இதன்போது பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவருக்கு ஆளுநர் அறிவித்துள்ளார்.
அந்த நடவடிக்கைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.