இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீ சந்தோஷ் ஜா பெல்ஜியத்திற்கான இந்திய துதராக பணியாற்றி வந்த நிலையிலேயே, தற்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான அடுத்த இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version