மன்னாரில் தீ விபத்து -பல ஏக்கர் காடுகள் தீக்கிரை

மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் காடுகள் தீக்கிரையாகியுள்ளன.

நேற்று(23.09)சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள் புதர்கள் உட்பட அனைத்திலும் தீப் பற்றியுள்ளது. காற்றின் வேகத்தினால்அருகில் இருந்த காடுகளும் தீப்பற்றிய நிலையில், தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

பொதுமக்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர முயற்சியினால் பற்றியெரிந்த தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் அப்பகுதியில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உட்பட பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகியுள்ளன .

தீப்பரவலுக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. மன்னார் மாவட்டத்தில் தீயணைப்புச் சேவை இல்லாமையினால் வவுனியா தீயணைப்பு பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும் காடுகள் எரிந்து அணையும் வரை தீயணைப்பு சேவை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ரோகினி நிசாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version