இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலமான குஷிநகரை சேர்ந்த 16 வயது சிறுமியை கத்தி முனையில் கடத்தி, அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த குறித்த பெண்ணை, அவரது அயல் வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மாட்டுத்தொழுவத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்து மற்றும் இருவருடன் இனைந்து பலவந்தமாககாரில் ஏற்றி சென்றதாக தெரியவந்துள்ளது.
வன்கொடுமையின்போது மயக்கம் அடைந்த பெண்ணை மீண்டும் அவரது வீட்டு மாட்டுத்தொழுவத்திற்கு அருகில் வீசி சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.