செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு VisAbility அமைப்பினரால் வவுனியாவிலுள்ள ஆட்சிபுரம், சமனங்குளம் எல்லப்பர் மருதங்குளம் ஆகிய பிரதேசங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நாடகங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விளக்கங்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
விசிபிலிட்டி நிறுவனமானது ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இலங்கையில் இயங்கி வரும் ஒரு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனமானது மாற்றுத்திறனாளிகளது கல்வி மற்றும் அவர்களுடைய உரிமை தொடர்பில் வேலை செய்கின்ற ஒரு அமைப்பாகும்.


