இன்று (06.10) காலை பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குளியாப்பிட்டிய ஹெட்டிபொல கரந்திப்பல பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் பாடசாலை பஸ் மோதியதில் பாடசாலை பஸ்ஸில் பயணித்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.