“ஷி யான் 6” என்ற சீனக் கப்பலுக்கு இந்த நாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கப்பல் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“ஷி யான் 6” கப்பல் இம்மாதம் இலங்கை வர அனுமதி கோரி இருந்த போதிலும் தாம் அடுத்த மாததிற்கே அனுமதி வழங்கி இருந்ததாகவும், மீண்டும் இம்மாத இறுதியில் வர அனுமதி கோரி இருந்த போதும், நவம்பர் மாதம் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இலக்கைக்கு நல்ல உறவு இருப்பதாகவும், எனினும் நாடு என்ற ரீதியில் நாமும் சில தீர்மானங்களை மேற்கொள்ள அனுமதி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ள்ளார்.