இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பதவி விலகல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் பல முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விற்பனை மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிய தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் கடந்த காலங்களில் பதிவு விலகியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் வேறு வேலைகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பதவி விலகியவர்கள் நீண்ட காலமாக பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய நிலையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் அவர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவி விலகியிருந்தார்.

இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் பல முக்கிய முகாமைத்துவ பதவிகளில் பணியாற்றியவர்கள் பதவி விலகி உள்ளமையால் அதன் உள்ளக நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version