இன்றைய வானிலை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (27.10) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் கடும் மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வாநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply