இன்று (07.11) மாலை பலத்த இடி மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.