கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

கொழும்பு 11 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நாளை (24.11) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (24.11) மாலை 5.00 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை (25.11) காலை 9.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version