யாழில் இராணுவ உடைகள் மீட்பு!

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளவான இராணுவ உடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த நிலையில் அருகில் இருந்த கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ உடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர், அதனை அப்புறப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த உடைகள் யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கிகள் எனவும் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply