இராஜாங்க அமைச்சரினால் மண்முனைப்பற்றில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கிவைப்பு!

மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது முதற்கட்டமாக 19 பயனாளிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply