விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரம்..!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 23 பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 7 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, 101 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 192 கிராம் ஹெரோயின், 10,611 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply