நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23 பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 7 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, 101 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 192 கிராம் ஹெரோயின், 10,611 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.