மோதர ரந்திய உயன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வருகை தந்த இருவரின் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரந்திய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.